கொடைக்கானலில் ப்ளம்ஸ் பழத்தின் விளைச்சல் குறைந்து வருவதால் விவசாயிகள் வேதனை
Jun 7 2023 6:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொடைக்கானலில் ப்ளம்ஸ் பழத்தின் விளைச்சல் குறைந்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பெரும்பாலான இடங்களில் ஊடுபயிராக அதிக அளவில் ப்ளம்ஸ் விவசாயம் செய்யப்படுகிறது. ஊட்டி ஆப்பிள் என அழைக்கப்படும் ப்ளம்ஸ் பழங்கள் இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மருத்துவ குணம் கொண்ட இப்பழங்களின் விளைச்சல், தற்போது படிப்படியாக குறைந்து கொண்டே வருவதாக அப்பகுதி விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். அழிவின் விளிம்பில் இருக்கும் ப்ளம்ஸ் விவசாயத்தை, தமிழக அரசும், தோட்டக்கலைத்துறையும் மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தள்ளனர்.