மலைப்பகுதிகளில் விளைவிக்கப்படும் ரம்டான், மங்குஸ்தான் பழங்கள் : குற்றாலத்தில் தனித்தனியாக கடைகள் அமைத்து விற்பனை
Jun 7 2023 5:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள மலைப்பகுதிகளில் விளைவிக்கப்படும் ரம்டான், மங்குஸ்தான் பழங்களின் சீசன் தொடங்கியுள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ளதால், ரம்டான், மங்குஸ்தான் பழங்களை விற்பனை செய்வதற்காக ஏராளமான வியாபாரிகள் குற்றாலம் பகுதியில் தனித்தனியாக கடைகளை அமைத்து விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். கேரள பகுதியில் விளைவிக்கப்படும் இந்த வகையான பழங்களின் வரத்து தற்போது குற்றாலம் பகுதிக்கு அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.