நாகை அருகே குண்டும் குழியுமான சாலையை சீரமைத்து தர கோரி பொதுமக்கள் வலியுறுத்தல்
Jun 7 2023 5:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே குண்டும் குழியுமான சாலையை சீரமைத்து தர கோரி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். விழுந்தமாவடி முதல் காமேஸ்வரம் எல்லை ரோடு கன்னிதோப்பு சாலை வரை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர். இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் உடனடியாக மாவட்ட சாலையை சீரமைத்து தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.