ஜெயா ப்ளஸ் செய்தி எதிரொலி - தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் ஓடைகள் கலக்கும் இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு
May 31 2023 6:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜெயா பிளஸ் செய்தி எதிரொலியாக தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் ஓடைகள் கலக்கும் இடங்களில் நெல்லை மாநகராட்சி ஆணையர் ஆய்வு மேற்கொண்டார். நெல்லை தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் ஓடைகள் அதிகமாக கலந்து, தண்ணீரை பயன்படுத்த முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பானதை தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் தலைமையிலான குழுவினர் மீனாட்சிபுரம், சிந்து பூந்துறை, குறுக்குத்துறை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். கழிவு நீர் ஓடைகள் தாமிரபரணி ஆற்றில் கலக்காதவாறு நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், வீடுகளுக்கு அருகே பாதாள சாக்கடை இருந்தால் அவற்றை கழிவு நீர் ஓடைகளுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.