கொடைக்கானலில் 65,000 சுற்றுலா பயணிகள் மலர்க்கண்காட்சியை கண்டு ரசிப்பு : ரூ.18 லட்சம் வருவாய் கிடைத்ததாக வருவாய் என தகவல்
May 31 2023 4:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொடைக்கானலில் 5 நாட்களாக நடைபெற்ற மலர் கண்காட்சியை 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்ததாக தோட்டக்கலை துறையினர் தெரிவித்துள்ளனர். பிரயண்ட் பூங்காவில் கோடை விழா கடந்த 26ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக நடைபெற்ற மலர்கண்காட்சியில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாத்துகள், பூக்கூடை, தோனி டீ-சர்ட், காட்டெருமை, வரிக்குதிரை, மயில் உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்தது. கடந்த 5 நாட்களில் மலர்கண்காட்சியை காண 65 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாகவும், இதன் மூலம் சுமார் 18 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும் தோட்டக்கலை துறையினர் தெரிவித்துள்ளனர்.