கரூர் அருகே கிணற்றில் தூர்வாறும் பணியின் போது கயிறு அறுந்து விழுந்து 2 பேர் படுகாயம்
Mar 28 2023 6:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூர் மாவட்டம் ஆட்டையாம்பரப்பு அருகே கிணற்றில் தூர்வாறும் பணியின் போது கயிறு அறுந்து விழுந்த இருவரை தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர். ஆட்டையாம்பரப்பு அருகே உள்ள குள்ளம்பட்டியில் தண்ணீர் இல்லாத வறண்ட விவசாய கிணற்றில் தூர்வாரம் பணியில் 4 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது, சந்தோஷ் குமார், சரவணன் ஆகியோர் கயிறு அறுந்து கிணற்றில் விழுந்து காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.