கன்னியாகுமரியில் இளம்பெண்களை கவர்ந்து, ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்த விவகாரம் : பாதிரியார் ஃபெனடிக் ஆண்டோவை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க, சைபர் கிரைம் போலீசுக்கு நீதிமன்றம் அனுமதி
Mar 28 2023 2:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பாதிரியார் பெனடிக் ஆன்றோவை, நீதிமன்ற அனுமதி பெற்று, நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் 24 மணி நேர காவலில் எடுத்துள்ளனர். பாதிரியார் பெனடிக் ஆன்றோ பேச்சிப்பாறை, தக்கலை அருகே உள்ள தேவாலயங்களில் பாதிரியராக பணிபுரிந்தபோது, அங்கு வரும் இளம் பெண்களிடம் ஆபாசமாக பேசியது, வாட்ஸ் அப்பில் ஆபாச தகவல்கள் அனுப்பியது உள்ளிட்ட பல்வேறு புகாரில் கடந்த 19ஆம் தேதி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், பாதிரியார் பெனடிக் ஆன்றோவிடம் இருந்து வாக்குமூலம் மற்றும் ஆவணங்களைப் பெறுவதற்காக, நாகர்கோவில் எஸ்.பி. அலுவலகத்திற்கு அவரை அழைத்து வந்துள்ளதாக சைபர் கிரைம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.