திருப்பூரில் தலைக்கவசம் அணியாமல் வருவோரிடம் லஞ்சம் பெறும் டிராஃபிக் போலீஸ் : லஞ்சப் பணத்தை ஹெல்மெட்டில் வைக்கச் சொல்லும் போக்குவரத்து காவலர்
Mar 27 2023 6:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே தலைக்கவசம் அணியாமல் வந்த நபர் ஒருவர், அபராதத்திற்கு பதிலாக லஞ்சப் பணத்தை போக்குவரத்து காவலரின் தலை கவசத்திற்குள் வைத்துவிட்டுச் செல்லும் காட்சி வைரலாகி வருகிறது. தலைக்கவசம் இல்லாமல் வரும் நபர்களிடம், திருப்பூர் மாநகரம், தெற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட போக்குவரத்து காவலர் ஒருவர், அபராதம் விதிக்காமல், லஞ்சப் பணத்தை தலைக்கவசத்தில் வைத்து விட்டுச் செல்லும்படி கூறுகிறார். அதனைத் தொடர்ந்து பழைய பேருந்து நிலையம் அருகே தலைக்கவசம் அணியாமல் வந்த இளைஞர் ஒருவர், காவலரின் இருசக்கர வாகனத்தில் தொங்கவிடப்பட்டுள்ள தலைக்கவசத்தில் லஞ்சப் பணத்தை வைத்து விட்டுச் சென்றுள்ளார். இதனை எதிர் திசையில் இருந்து வீடியோ பதிவு செய்த நபர், அந்தக் காட்சியை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.