சென்னை போரூர் அருகே 6 அடி பள்ளத்தில் லோடு வேன் கவிழ்ந்து விபத்து - வேனுக்குள் சிக்கி ஓட்டுநர் தவிப்பு
Jan 31 2023 3:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை போரூர் அருகே 6 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லோடு வேன் மற்றும் ஓட்டுநரை கிரேன் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் மீட்டனர். திருவள்ளூர் மாவட்டம் போரூரில் இருந்து ராஜேஷ் என்பவர் லோடு வேன் ஒன்றில் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு பூந்தமல்லி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை அருகே மெட்ரோ ரயில் பணிகளுக்காக தோண்டப்பட்டிருந்த ஆறடி பள்ளத்தில் வேன் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்துக்குள் விழுந்தது. இதில், ராஜேஷ் வேனுக்குள் சிக்கிக் கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கிரேன் உதவியுடன் லோடு வேனை வெளியே தூக்கி ராஜேஷை மீட்டனர்.