திருவண்ணாமலையில் சாலையில் பூக்களை கொட்டி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் - நகராட்சி கடைகளின் வாடகை உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு
Jan 31 2023 10:29AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
3வது முறையாக பல மடங்கு வாடகையை உயர்த்திய திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பூ வியாபாரிகள் பூக்களை சாலையில் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேரடி வீதி மையப்பகுதியில் அமைந்துள்ள ஜோதி பூ மார்க்கெட்டிற்கு வந்த நகராட்சி அதிகாரிகள், வாடகை செலுத்தாத கடைகளுக்கு திடீரென சீல் வைத்ததால் கடை வாடகைதாரர்களுக்கும் நகராட்சி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைதொடர்ந்து விவசாயிகள் மற்றும் கடை வாடகை தாரர்கள் பூக்களை சாலையில் கொட்டி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.