ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்- மாநகராட்சி அலுவலகத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயார்
Jan 31 2023 1:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவெரா கடந்த 4 ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதனை தொடர்ந்து கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம், வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்தது. இதற்காக இன்றுமுதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும், பிப்ரவரி 7 ஆம் தேதி மனு தாக்கல் நிறைவடையும் எனவும் தெரிவித்துள்ளது. வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி மனுக்கள் பரிசீலனையும், பிப்ரவரி 10 ஆம் தேதி மனுக்களை திரும்ப பெற இறுதி நாளாகவும். அதனை தொடர்ந்து பிப்ரவரி 27 ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, மார்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.