ஸ்ரீபெரும்புதூரில் இந்திரா காந்தி சிலையை அகற்றும் நடவடிக்கையால் போக்குவரத்து பாதிப்பு
Nov 26 2022 3:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவகம் எதிரே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்திரா காந்தி சிலையானது அங்கு நடைபெறும் சாலை விரிவாக்க பணிக்கு இடையூறாக இருந்து வந்தது. இதனை அகற்றுமாறு காங்கிரஸ் கட்சி தலைமைக்கு அதிகாரிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதனை அக்கட்சி பொருட்படுத்ததால், இன்று நெடுஞ்சாலைதுறை மற்றும் வருவாய்துறையினர் இணைந்து சிலையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. இரண்டு நாள் அவகாசம் அளிக்குமாறும், சிலையை தாங்களே அகற்றிவிடுவதாகவும் காங்கிரசார் தெரிவித்ததை அடுத்து இப்பணி நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து போக்குவரத்து நெரிசலும் சீரடைந்தது.