நீலகிரி குன்னூர் பகுதியில் சாலைகளில் உலா வந்த கரடி மற்றும் புலி - வாகன ஓட்டிகள் அச்சம்
Nov 26 2022 12:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீலகிரி மாவட்டத்தில் சாலைகளில் வனவிலங்குகள் நடமாடுவதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். உணவு தேடி வனவிலங்குகள் அவ்வப்போது காட்டை விட்டு வெளியேறி சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன. குன்னூர் அருகே தாய் சோலை செல்லும் சாலையில் கரடி ஒன்று வனப்பகுதியிலிருந்து சாலையைக் கடந்து சென்றது. இதேபோன்று, சிங்காரா பகுதியில் உள்ள சாலையில் வாகனம் சென்று கொண்டிருக்கும்போது, புலி ஒன்று வாகனம் முன்பாக வந்தது. இதனால் வாகன ஓட்டிகளும், பயணிகளும் அச்சமடைந்தனர். வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால், வாகன ஓட்டிகள் அதற்கு இடையூறு செய்யும் விதமாக புகைப்படங்கள் எடுக்கவோ வீடியோ பதிவு செய்யவோ கூடாது என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.