நெல்லையில் மின் கட்டணம் செலுத்தும் எந்திரங்களில் கோளாறு - கட்டணம் செலுத்த முடியாமல் பொதுமக்கள் அவதி

Oct 6 2022 3:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

நெல்லையில் மின் கட்டணம் செலுத்தும் எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக கட்டணம் செலுத்த முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கொக்கிரகுளத்தில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்காக பொதுமக்கள் இன்று காலையில் இருந்து குவிந்தனர். காலை 8.30 மணிக்கு மின் கட்டணம் செலுத்தும் பணி தொடங்கிய நிலையில் சிறிது நேரத்தில் எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதனால் மின் கட்டணம் செலுத்துவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள், கட்டணம் செலுத்த முடியாமல் அவதி அடைந்தனர். மின் கட்டணம் செலுத்துவதற்கு இன்று கடைசி நாள் என்பதால் சிலர் கட்டணம் செலுத்த வந்த போதும், அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் மின்வாரிய ஊரியர்களிடம் கட்டணம் செலுத்தவந்த மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00