புதுக்கோட்டை: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாமல் இருப்பதால் விவசாயிகள் வேதனை
Oct 6 2022 2:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுக்கோட்டை மாவட்டம் கல்லாக்கோட்டை கிராமத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாமல் இருப்பதால், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்து வருவதாக, விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கல்லாக்கோட்டை கிராமத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையம், கடந்த சில மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளது. இதனால் நெல் கொள்முதல் பணிகள் நடைபெறாததால், நான்காயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள், தேங்கி கிடக்கின்றன. தற்போது மழை பெய்வதால் நெல்மணிகள் முளைக்க தொடங்கிவிட்டன. தொடர்ந்து மழை பெய்தால், அனைத்து நெற் பயிர்களும் முளைத்து வீணாகி விடும் என்பதால், நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறந்து, நெல்லை கொள்முதல் செய்ய வேண்டுமென அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.