பெரம்பலூரில் டிராக்டர் ஷோரூமில் ரூ.32,000 கொள்ளை : சிசிடிவி பதிவை வைத்து போலீசார் விசாரணை
Oct 6 2022 2:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெரம்பலூரில், டிராக்டர் ஷோரூமில் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை, சிசிடிவி காட்சியை வைத்து, போலீசார் தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் நான்கு ரோடு அருகேயுள்ள அரியலூர் சாலையில், டிராக்டர் விற்பனை ஷோரூம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளரான குபேந்திரன் என்பவர், நேற்றிரவு வழக்கம்போல் ஷோரூமை பூட்டிவிட்டு, வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் தூய்மை பணிக்காக இன்று காலை பணியாளர்கள் வந்தபோது ஷோரூம் திறந்து கிடந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் ஷோரூமின் உரிமையாளர் குபேந்திரன் நேரில் சென்று பார்த்தபோது, கடையில் வைத்திருந்த 32 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், அருகிலிருந்த கிரானைட் கடையின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. ஆனால் அங்கு பொருட்கள் எதுவும் திருடு போகவில்லை. இந்த 2 கடைகளின் உரிமையாளர்கள் கொடுத்த புகாரின்பேரில் சிசிடிவி காட்சி உதவியோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.