தூத்துக்குடி மீன் சந்தையில் மீன்வரத்து அதிகரிப்பு - விலை வீழ்ச்சியடைந்த போதிலும் புரட்டாசி மாதம் என்பதால் விற்பனை மந்தம்
Oct 6 2022 12:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மீன் சந்தையில் வரத்து அதிகரித்து விலை வீழ்ச்சியடைந்த போதிலும், புரட்டாசி மாதம் என்பதால் விற்பனை மந்தமாக உள்ளது என வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
தூத்துக்குடியில் உள்ள மீன் சந்தையில், 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. ஒவ்வொரு வாரமும் புதன், சனி மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்களில், இங்கு அசைவ பிரியர்களின் கூட்டம் அதிகளவில் காணப்படும். ஆனால் தற்போது புரட்டாசி மாதம் என்பதால், மீன் வாங்குவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் தூத்துக்குடி மீன் சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது. மீன் வரத்து அதிகரித்து விலை வீழ்ச்சியடைந்தும், விற்பனை குறைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சிறிய வகை மீன்கள் தற்போது 150 ரூபாய்க்கும், பெரிய ரக மீன்கள் கிலோ 450 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.