விருதுநகரில் எஸ்.பி.கே. குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் தொடரும் வருமானவரித்துறை சோதனை - பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்
Jul 6 2022 6:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகரில் உள்ள பிரபல நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த நிறுவனமான எஸ்.பி.கே. குழுமத்தில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை மையமாக கொண்டு நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த நிறுவனமான எஸ்.பி.கே. குழுமம் செயல்பட்டு வருகிறது. எடப்பாடி ஆட்சிக்காலத்தில் அவரது சம்பந்தி மற்றும் மகனுடன் இணைந்து எஸ்.பி.கே. குழுமம் பல கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலை தொடர்பான ஒப்பந்தங்களை எடுத்து செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 2018-ம் ஆண்டு எஸ்.பி.கே. குழுமத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பல கோடி ரூபாய், ரொக்கம், நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில், எஸ்.பி.கே. குழுமத்திற்கு சொந்தமான அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. எஸ்.பி.கே. குழுமத்தின் நிறுவனர் செய்யாதுரை மற்றும் அவரது மகன்களான கருப்பசாமி, நாகராஜ், பாலசுப்பிரமணியன் மற்றும் ஈஸ்வரன் ஆகியோரது வீடுகளிலும் 20-க்கும் மேற்பட்ட இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை எடுத்ததில் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் போரில் இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.