ஈரோடு அம்மாப்பேட்டை பேரூராட்சி 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அமமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்
Jul 6 2022 5:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு புறநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அம்மாப்பேட்டை பேரூராட்சி 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திரு.என்.சிந்தனுக்கு குக்கர் சின்னத்த்தில் வாக்கு கேட்டு தலைமை நிலையச் செயலாளரும், மண்டல பொறுப்பாளருமான திரு. சண்முகவேல் பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டை பேரூராட்சி 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் திரு.என்.சிந்தனுக்கு ஆதரவாக தலைமைச் செயலாளரும், மண்டல பொறுப்பாளருமான திரு.சண்முகவேல் ஊமரெட்டியூர், சுந்தரபாளையம், பந்தல் காடு உள்ளிட்ட பல இடங்களில் சேகரித்தார். இதில் அமைப்புச் செயலாளர் திரு. துளசிமணி, ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. ஜம்பை செல்வம் என்ற சதாசிவம் மூர்த்தி, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் திரு. வேலுச்சாமி, ஈரோடு மாநகர கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. சிவ பிரசாத், ஈரோடு மாநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. வெங்கடேஷ், உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.