நெல்லை கல்குவாரி உரிமையாளர் வீட்டில் கணினி, ஆவணங்கள் கொள்ளை - போலீஸ் பாதுகாப்பு அளித்த நிலையில் நடந்த திருட்டு சம்பவத்தால் பரபரப்பு
May 20 2022 5:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை கல்குவாரி உரிமையாளர் வீட்டில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் கணிணி, முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அடுத்த அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இடுபாடுகளில் சிக்கியுள்ள மற்றொரு தொழிலாளியின் உடலை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே கல்குவாரி உரிமையாளரான காங்கிரஸ் பிரமுகர் சேம்பர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகியோரின் வீடுகளில் நீதிமன்ற உத்தரவின்படி, காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மேலும் கல்குவாரி அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. இந்நிலையில், திசையன்விளையில் உள்ள செல்வராஜின் வீட்டில் திருட்டு நடந்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்று சோதனையிட்ட போலீசார், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கணினி மற்றும் முக்கிய ஆவணங்கள் திருட்டு போனதை கண்டுபிடித்தனர். போலீசார் பாதுகாப்பையும் மீறி நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.