டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதல்நிலை தேர்வு, நாளை நடைபெற உள்ளது
May 20 2022 4:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதல்நிலை தேர்வு, நாளை நடைபெற உள்ளது. இதற்காக, 11 லட்சத்து 78 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 38 மாவட்டங்களில் 4 ஆயிரத்து 12 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 7 மையங்களில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேர் தேர்வெழுதுகின்றனர். குரூப்-2 தேர்வை கண்காணிக்க, 323 பறக்கும் படைகள், 6 ஆயிரத்து 400 ஆய்வு குழுக்கள், 4 ஆயிரத்து 12 வீடியோ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 9.30 மணி முதல், பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும். ஜூன் இறுதியில் தேர்வு முடிவு வெளியிடப்படும்.