பருத்தியை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் : தூத்துக்குடி விவசாயிகள் கோரிக்கை
May 20 2022 4:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டத்தில் பருத்தி நல்ல விளைச்சல் கண்டுள்ள நிலையில் அரசே நேரடியாக பருத்தியை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம், கோவில்பட்டி, பூவாணி போன்ற இடங்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் பருத்தி பயிர் செய்துள்ளனர். இந்த ஆண்டு பருத்தி நல்ல விளைச்சல் கண்டுள்ளது. ஆனால் ஒரு குவிண்டால் பருத்தியை வியாபாரிகள் 6 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கும் நிலை உள்ளது. இதனால் தாங்கள் நஷ்டம் அடைய வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே அரசே பருத்தியை ஒரு குவிண்டாலுக்கு பத்தாயிரம் ரூபாய் என விலை நிர்ணயம் செய்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.