காவிரி ஆற்றில் பெருக்கெடுத்த தண்ணீரால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரிப்பு - விரைவில் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு

May 20 2022 2:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஒகேனக்கல்லில் இருந்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால். அணையின் நீர்மட்டம் 112 அடியாக உயர்ந்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஒகேனக்கல்லில் இருந்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 29 ஆயிரத்து 72 கன அடியிலிருந்து 29 ஆயிரத்து 964 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் வினாடிக்கு ஆயிரத்து 500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவை காட்டிலும், நீர்வரத்து பல மடங்கு அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அணையின் நீர் இருப்பு 82 புள்ளி நான்கு பூஜ்ஜியம் டிஎம்சி ஆக உள்ளது. இதேபோல் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தால், இம்மாத இறுதிக்குள் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00