முறைகேடாக விசா வழங்க கார்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்ற விவகாரம் - டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஆடிட்டர் பாஸ்கர் ராமனை 4 நாள் காவலில் விசாரிக்‍க அனுமதி

May 19 2022 7:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

விசா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமன் டெல்லி சி.பி.​ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை 4 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சீனர்களுக்கு விசா வாங்கித்தர 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான டெல்லி, சென்னை உள்பட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமனை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, அவரை டெல்லி கொண்டு சென்று விசாரிக்‍க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆடிட்டர் பாஸ்கர் ராமன் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை, 4 நாள் காவலில் விசாரிக்‍க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00