6 மணி நேரம் இடைவிடாமல் தமிழ் இசை, தேவாரம், தேசபக்தி உள்ளிட்ட சாஸ்திரிய சங்கீதம் - கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்மணி உலக சாதனை
Apr 15 2022 11:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
6 மணி நேரம் இடைவிடாமல் தமிழ் இசை, தேவாரம், தேசபக்தி உள்ளிட்ட சாஸ்திரிய சங்கீதம் பாடி, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த உலக சாதனை படைத்துள்ளார்.
தமிழ் வருடப் பிறப்பையொட்டி, கரூரில், ஜெட்லியின் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் ஸ்ரீ பசுபதீஸ்வரர் ஐயப்ப சேவா மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மூன்று வயது குழந்தை முதல் 36 வயது வரை உள்ளவர்கள் பங்குபெற்றனர், இதில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த திருமதி பூரணி முரளிதரன் என்பவர், பல்சுவை பாடல்களைப் பாடி சாதனை செய்துள்ளார். 6 மணி நேரம் இடைவிடாமல் தமிழ் இசை, திருவாசகம், தேவாரம், தேசபக்தி, பாரதியார், பாரதிதாசன் பாடல் மற்றும் சாஸ்திரிய சங்கீதம் என பல்சுவைப் பாடல்கள் பாடி அவர் சாதனை படைத்தார்.
6 மணி 11 நிமிடங்கள் தொடர்ந்து பாடல் படி பூரணி, ஜெட்லியின் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை படைத்தார். சாதனை படைத்த இசை கலைமாமணி பூரணிக்கு ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்டின் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.