பொது பட்டியலுக்கு மாற்றப்பட்ட பரவை பேரூராட்சி தலைவர் பதவி : பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

Jan 23 2022 4:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சியில் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட பேரூராட்சித் தலைவர் பதவியை ரத்து செய்ததை கண்டித்து பழங்குடியின சமூகத்தினர் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பரவை பேரூராட்சியில், 15 மற்றும் 16 வது வார்டு பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. கடந்த தேர்தல் அறிவிப்பின் போது, பேரூராட்சி தலைவர் பதவியும் சுழற்சி முறையில் பழங்குடியினர் சமூகத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பாணையில் 15 மற்றும் 16 வது வார்டு பொது வார்டாக மாற்றப்பட்டதுடன் பேரூராட்சி தலைவர் பதவியும் பொது பட்டியலில் மாற்றப்பட்டது.

இது பழங்குடியினர் சமூகத்தினர் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உடனடியாக மறு பரிசீலனை செய்து பொதுப்பிரிவினருக்கு மாற்றிய பரவை பேரூராட்சி தலைவர் மற்றும் 15 மற்றும் 16 வது வார்டு உறுப்பினர் ஆகியவற்றை மீண்டும் பழங்குடியினர் சமூகத்திற்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஊரின் மையத்தில் அமர்ந்து இரவில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆதார் மற்றும் ரேசன் கார்டை ஒப்படைத்துவிட்டு மலையில் குடியேற போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00