சென்னை ஈக்காட்டுத்தாங்கல் மேம்பாலத்தில் இரவு முழு ஊரடங்கின் போது பேருந்தும் காரும் மோதி விபத்து
Jan 23 2022 1:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை ஈக்காட்டுத்தாங்கல் மேம்பாலத்தில் காரும், அரசுப் பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில், காரில் சென்ற நபர் காயமடைந்தார். கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், காயமடைந்த நபரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசுப்பேருந்து திருச்சியில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்தபோது, மேம்பாலத்திற்கு அடியில் இருந்து எதிர் திசையில் ஏறியதால், விபத்து நடந்ததாக தெரிகிறது. இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்த நள்ளிரவில், காரில் வெளியே சென்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.