புதுக்கோட்டையில் 3 மாதங்களாக ஊதியம் வழங்காததால் ஆசிரியர் அதிருப்தி : வட்டார கல்வி மையத்தில் பொருட்களை தூக்கியெறிந்து எதிர்ப்பு
Jan 23 2022 12:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில், ஊதியம் வழங்காததால் ஆத்திரமடைந்த ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி ஆசிரியர், வட்டார கல்வி மையத்தில் பொருட்களை உடைத்து, கோப்புகளை தூக்கி எறிந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மணமேல்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில், தைலம்மை என்பவர், ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 3 மாத காலமாக ஊதியம் வழங்காததால் ஆத்திரமடைந்த அவர், வட்டார கல்வி அலுவலர் முத்துக்குமாரிடம் பலமுறை முறையிட்டுள்ளார். இருப்பினும், உரிய பதில் கிடைக்காததால் ஆத்திரமடைந்த அவர், வட்டார கல்வி அலுவலகத்தில் உள்ள கணினி, நாற்காலி மற்றும் கோப்புகளை தூக்கி எறிந்து, எதிர்ப்பை வெளிக்காட்டினார்.