புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பூங்கா நகரில் பழுதான மின் கம்பம் - அச்சத்தில் மக்கள்
Oct 19 2021 6:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பூங்கா நகரில் உள்ள மின் கம்பத்தின் அடிப்பகுதி, காரை பெயர்ந்து அதனுள் உள்ள இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் நிலையிலும் எந்நேரமும் சாய்ந்து விடும் நிலையிலும் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த கம்பத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் மின் கம்பிகள் மூலம் மின் விநியோகம் நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட மின் துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் அப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உறைந்துபோய் உள்ளனர்.