திருவள்ளூர்: சலபாசனத்தில் தொடர்ந்து 45 நிமிடங்கள் நின்று உலக சாதனை
Oct 19 2021 6:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கும்மிடிப்பூண்டியை சேர்ந்த நான்காம் வகுப்பு பள்ளி மாணவன் ஹரிஷ் கண்ணா, சலபாசனத்தில் தொடர்ந்து 45 நிமிடங்கள் நின்று உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். யோகா பயிற்சி செய்து வரும் மாணவன், தரையில் தலையை வைத்து, தலை மீது கால்களை வைக்கும் சலபாசனத்தில் தொடர்ந்து 45 நிமிடங்கள் நின்று உலக சாதனை படைத்தார். இதனால் மாணவனின் இந்த சாதனை, இந்திய புக் ஆப் ரெக்கார்ட் மற்றும் Awesome world record புத்தகங்களில் இடம் பிடித்துள்ளது. சாதனை படைத்த மாணவனை, கும்மிடிப்பூண்டி பொதுமக்களும், விளையாட்டு வீரர்களும், சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.