திருவள்ளூர்: புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை
Oct 19 2021 6:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, திருவேற்காடு, மதுரவாயல், போரூர், வானகரம், வளசரவாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்ததால் தற்போது பெய்து வரும் கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.