எஸ்.எம்.எஸ்., ஆபாச புகைப்படங்களைக் காட்டி மிரட்டல் : அரியலூரில் பள்ளி மாணவி தற்கொலை - உறவினர்கள் போராட்டம்
Oct 19 2021 3:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரியலூர் மாவட்டத்தில், குறுந்தகவல் மற்றும் ஆபாச புகைப்படங்களைக் காட்டி மிரட்டியதால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம் கடுகூர் கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் என்பவரின் மகள், அங்குள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்தார். இவருக்கு, அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலர், ஆபாச குறுந்தகவல் மற்றும் தொலைபேசி அழைப்பு விடுத்தும் கிண்டல் செய்துள்ளனர். இதுகுறித்து புகார் அளித்தும், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மீண்டும் புகைப்படங்களைக் காட்டி மிரட்டியதுடன், மாணவி மற்றும் அவரது தந்தையை மிரட்டி கட்டைகளால் தாக்கியுள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்த மாணவி, விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார். பின்னர், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். இதைக் கண்டித்து, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.