மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தல் : திருச்சியில் கழுத்தில் தூக்குக்கயிறு மாட்டிக்கொண்டு விவசாயிகள் போராட்டம்
Oct 19 2021 3:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, திருச்சியில் விவசாயிகள், தங்கள் கழுத்தில் தூக்குக்கயிறு மாட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் - நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல்லை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில், அதன் மாநிலத் தலைவர் திரு.அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டிக்கொண்டு கண்டன முழக்கம் எழுப்பினர்.