ஆட்டுக்குட்டிகளுக்கு தாயாக மாறி பால் புகட்டும் நாய்
Oct 19 2021 12:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே தாய்ப்பால் இன்றி தவித்து வந்த இரு ஆட்டுக்குட்டிகளுக்கு நாய் ஒன்று தாயாக மாறி பால் கொடுக்கும் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருச்சுழி அருகே உள்ள திருமலைபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி முத்துவிஜயன். இவர் தனது வீட்டில் ஆடு,மாடுகள் மட்டுமின்றி, குட்டிகளை ஈன்ற பெண் நாய் ஒன்றையும் வளர்த்து வந்துள்ளார். சமீபத்தில், சந்தையில் இரு ஆட்டுக்குட்டிகளை வாங்கி வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், தாய்ப்பால் இன்றி பசியினால் தவித்த 2 ஆட்டு குட்டிகளுக்கும் நாய் தாயாக மாறி தினசரி பாலூட்டி வருகிறது. இதனை அறிந்த கிராம மக்கள் இந்த நிகழ்வை வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.