இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் : தமிழக மீனவர்கள் படகு மீது மோதி தாக்குதல் 2 மீனவர்களை சிறைப்பிடித்து சென்ற கடற்படையினர்

Oct 19 2021 11:36AM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினத்தைச்சேர்ந்த மீனவர்களின் படகுகள் மீது இலங்கை கடற்படையினர் ​ரோந்து படகு மோதியதில் 3 மீனவர்கள் நடுக்‍கடலில் விழுந்து தத்தளித்தனர். அவர்களில் இரண்டு பேரை சிறைப்பிடித்து சென்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மூலம் மீன்பிடிக்கச் சென்று 19 நாட்டிகல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகின் மீது தங்களது கப்பலை விட்டு மோதினர். இதில் சேவியர், ராஜகிரி, சுகந்தன் ஆகியோர் சென்ற படகு கடலில் மூழ்கியது. மேலும் சுகந்தன், சேவியர் ஆகிய இருவரையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு சென்றனர். கடலில் விழுந்த ராஜகிரியை கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் தேடி வருகின்றனர். இலங்கை கடற்படையினரின் தொடரும் அராஜக செயல் தமிழக மீனவ மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00