தூத்துக்குடி அருகே தனியாரால் 1,000 நிலம் ஆக்கிரமிப்பு : அரசு நிலத்தை மீட்டு மக்களுக்கு தருமாறு கோரிக்கை
Oct 19 2021 11:31AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி அருகே தனி நபர் ஒருவரால் ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டுள்ள ஆயிரம் ஏக்கர் நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி அருகே உள்ள அய்யனார்புரம், துப்பாசு பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான தரிசு மற்றும் மேய்ச்சல் நிலங்கள் சுமார் ஆயிரம் ஏக்கர் உள்ளன இந்த நிலங்களை சில தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து உப்பளங்களாக மாற்றியுள்ளனர் .
எனவே ஆக்கிரமிப்பு செய்துள்ள இந்த நிலங்களை தமிழக அரசு மீட்டு ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் என அய்யனார்புரம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.