சென்னை வில்லிவாக்கத்தில் மதுபோதையில் வயதான தாயிடம் தகராறு : அண்ணனை கட்டையால் அடித்துக்கொன்ற தம்பி கைது

Oct 19 2021 11:28AM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை வில்லிவாக்‍கத்தில் மதுபோதையில் தனது தாயிடம் தகராறில் ஈடுபட்டு வந்த அண்ணனை கட்டையால் அடித்துக்‍கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர்.

வில்லிவாக்கம் பலராமபுரம் பகுதியைச் சேர்ந்த சிவராஜ் என்பவர், தனது தாயார் தனலட்சுமியிடம், தினந்தோறும் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனைத் தட்டிக்‍கேட்ட அவரது தம்பியிடமும் சிவராஜ் அடிக்‍கடி சண்டையிட்டு வந்துள்ளார். 67 வயதாகும் தாயார் தனலட்சுமி உடல்நலம் பாதித்த நிலையில், மது அருந்திவிட்டு வந்த சிவராஜ், தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, சிவராஜுடன், அவரது சகோதரர் பிரகாஷ் கடும் வாக்‍குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதைத்தொடர்ந்து ஆத்திரமடைந்த பிரகாஷ், சிவராஜை கட்டையால் பலமாக தாக்‍கியுள்ளார். இதனால் நிலைகுலைந்த சிவராஜ், சம்பவ இடத்திலேயே​உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிவராஜின் உடலைக்‍ கைப்பற்றி, பிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணன்-தம்பி இடையே ஏற்கனவே சொத்து தகராறு இருந்து வந்ததாகவும், இருவர் மீதும் குற்ற வழக்‍குகள் நிலுவையில் இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00