கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை தொடர்பாக விபத்துகளில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழப்பு - காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 6 மாத குட்டியானையும் பலி
Oct 19 2021 12:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரியில் பெய்து வரும் கனமழை தொடர்பான விபத்துகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையொட்டிய பகுதிகளில் பெய்து வரும் மழையால், பேச்சிபாறை, பெருஞ்சாணி, சிற்றார் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகளில் இருந்து 11 ஆயிரம் கனஅடி வரை உபரிநீர் வெளியேற்றப்படுவதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான இடங்களில் தண்ணீர் புகுந்து தீவுகள் போல் காட்சியளிக்கிறது. மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி மாவட்டம் முழுவதும் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் பேச்சிப்பாறை அணையில் கோதமடக்கு நீர்பிடிப்பு பகுதியில் தண்ணீரில் மிதந்து வந்த 6 மாத குட்டியானையின் உடலை வனத்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனை மேற்கொண்டு அடக்கம் செய்தனர். இதேப்போன்று காட்டாறு வெள்ளத்தில் சிக்கி வேறு ஏதும் வனவிலங்குகள் உயிரிழந்துள்ளதா என வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.