வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி மயிலாடுதுறையில் ஒன்று திரண்ட விவசாயிகள் - மகாத்மா காந்தி சிலையிடம் முறையிட்டு அரை நிர்வாண போராட்டம்
Sep 22 2021 1:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மயிலாடுதுறையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி அரை ஆடை அணிந்தபடி மகாத்மா காந்தி சிலையிடம் முறையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மகாத்மா காந்தி, அரையாடை புரட்சியை ஏற்படுத்தி, இன்றுடன் 100 ஆண்டுகள் முடிவடைகின்றன. 100 ஆண்டுகள் கடந்தும் தங்கள் நிலைமை மாறவில்லை என்றும், வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறக்கோரியும் மயிலாடுதுறை காந்திஜி சாலையில் விவசாயிகள் அரை ஆடை அணிந்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து, தங்கள் கோரிக்கையை அவர்கள் முறையிட்டனர். பின்னர், வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர்.