கன்னியாகுமரியில் தனியார் வங்கி அதிகாரியிடம் 10 லட்சம் ரூபாய் கொள்ளை - 3 பேர் கைது
Sep 22 2021 12:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி அருகே தனியார் வங்கி அதிகாரியிடம், 10 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். மாறாங்கோணம் பகுதியைச் சேர்ந்த தனியார் வங்கியில் பணிபுரியும் பிரவீஷ் என்பவர் 9-ம் தேதி தனது இருச்சக்கர வாகனத்தில் 10 லட்சம் ரூபாய் பணத்துடன் சென்ற போது, அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத கும்பல், பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றது. புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வள்ளியூர் அருகே பதுங்கியிருந்த கொள்ளையர்களை கைது செய்து 4 லட்சம் ரூபாயை மீட்டனர்.