டிவிட்டர் கணக்கை மீட்டுத்தந்த காவல்துறை டி.ஜி.பி.க்கு நடிகை குஷ்பு நன்றி
Jul 24 2021 4:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தனது டிவிட்டர் கணக்கை மீட்டுக்கொடுத்ததற்காக காவல்துறை டி.ஜி.பி. லைசேந்திரபாபுவுக்கு நடிகை குஷ்பு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியுமான குஷ்புவின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டிருந்தது. அதுகுறித்து டி.ஜி.பி. அலுவலகத்தில் நேரில் வந்து குஷ்பு புகார் கொடுத்திருந்தார். இதுதொடர்பாக டிவிட்டர் நிறுவனத்திற்கு சைபர் கிரைம் போலீசார் கடிதம் எழுதியிருந்தனர். இந்நிலையில், தனது டிவிட்டர் விரைவாக மீட்டுக்கொடுத்த டி.ஜி.பி. சைலேந்திர பாபு மற்றும் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.