கன்னியாகுமரியில் வரதட்சணை கேட்டு மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றிய கணவர் - வீட்டில் சேர்த்துக் கொள்ளும்படி கதறி அழுத மனைவி
Jul 24 2021 4:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரியில் கணவர் வரதட்சணை கேட்டு வீட்டை விட்டு வெளியேற்றிய நிலையில், மனைவி கொட்டும் மழையிலும் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையை அடுத்த திருத்துவபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் பிரியதர்ஷினி என்பவருக்கும், முளகுமூடு பகுதியை சேர்ந்த உதவிப் பேராசிரியர் ராஜ ஷெரின் என்பவருக்கும் கடந்தாண்டு ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. அப்போது, 100 பவுன் நகை, 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாகக் கூறப்பகிறடுது. இந்நிலையில், மேலும் நகை பணம் கேட்டு, கணவர் ராஜ ஷெரின் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பிரியதர்ஷினியை தொந்தரவு செய்ததாகத் தெரிகிறது. ஒரு கட்டத்தில், ராஜ ஷெரின் மற்றும் அவரது பெற்றோர் சேர்ந்து பிரியதர்ஷினியை வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவை பூட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியதர்ஷினி தன்னை வீட்டில் சேர்த்துக்கொள்ளுமாறு கதறி அழுதார். சாலையில் அமர்ந்து அழுது புரண்டார். இதனை அடுத்து சம்பவ இடத்திறு சென்ற தக்கலை போலீசார் பிரியதர்ஷினியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி அவர் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தார்.