தாளவாடி அருகே கரும்பு தோட்டத்துக்குள் புகுந்த யானை - பயிர்கள் சேதம்
Jul 24 2021 3:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கரும்பு தோட்டத்துக்குள் யானைகள் புகுந்ததால் சுமார் 1 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்தன. நெய்தாளபுரம், கோடம்பள்ளி தொட்டி கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவர், 5 ஏக்கர் பரப்பளவிலான தோட்டத்தில் கரும்பு விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் ராஜாவின் தோட்டத்துக்குள் புகுந்து கரும்பு பயிர்களை மிதித்தும், தின்றும் சேதப்படுத்தின. யானைகள் சேதம் செய்த கரும்பு பயிர்களுக்கு அரசு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.