ஜெனரேட்டர் அறையில் படுத்து உறங்கிய 2 விவசாயிகள் மூச்சுத்திணறி பலி - உதகை அருகே கோயில் திருவிழாவின்போது நேர்ந்த சோகம்

Jul 24 2021 2:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீலகிரி மாவட்டம் உதகை அருகே கோயில் திருவிழாவின்போது, ஜெனரேட்டர் அறையில் உறங்கிய 2 விவசாயிகள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

உதகை அருகே சோலூர், கோட்டட்டி, தட்டனேரி உள்பட 6 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் அறுவடைத் திருவிழாவை கொண்டாடுவார்கள். இந்த ஆண்டுக்‍கான விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி, அங்குள்ள கோயில் ஒன்றில், கிராம மக்‍கள் சிலர் தங்கியுள்ளனர். அப்போது, மின்சாரம் இல்லாததால் ஜெனரேட்டர் பயன்படுத்தபட்டுள்ளது. இதில், 5 பேர் ஜெனரேட்டர் வைக்கபட்டுள்ள பஜனை கூடத்திற்குள் சென்று படுத்து உறங்கினர். காற்று, மழையால் கதவு மற்றும் ஜன்னல்களை மூடி படுத்ததால், ஜெனரேட்டரிலிருந்து வெளியாகும் புகையால் 5 பேருக்கும் மூச்சுச்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 5 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், சுபாஷ், மூர்த்தி ஆகியோர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். அஜித்குமார், ரதீஷ், விக்னேஷ் ஆகியோர் மயங்கிய நிலையில் உதகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைகாக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டனர். கோயில் திருவிழாவின்போது நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00