திருப்பத்தூர் அருகே ஆயுதங்களுடன் தொழிலதிபரின் காரை வழிமறித்த மர்ம நபர்கள் : ரூ.11 லட்சம் ரொக்கம் பறிப்பு - போலீசார் விசாரணை
Jul 24 2021 1:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், தேசிய நெடுஞ்சாலையில் ஆயுதங்களுடன் தொழிலதிபரின் காரை வழிமறித்த மர்ம நபர்கள், 11 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தைப் பறித்துச் சென்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் ஞானசேகரன் என்பவர், வேலூர் மாவட்டம் குடியாத்தத்திற்கு சென்று சூதாட்டம் விளையாடி, 22 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்ததாகத் தெரிகிறது. இதனை அடுத்து பணத்தை 2 பைகளில் எடுத்துக் கொண்டு காரில் நண்பர் சிவக்குமார் மற்றும் ஓட்டுனர் பாலாஜியுடன் நாட்றம்பள்ளி திரும்பியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு மேம்பாலம் மீது கார் சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு காரில் பின் தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஞானசேகர் சென்ற காரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி பணத்தை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது இரு தரப்பினரிடையே மோதல் எற்பட்டுள்ளது. பின்னர் 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருந்த பையை பறித்துக் கொண்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து ஞானசேகரன் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.