சென்னை நொளம்பூரில் குடிபோதையில் போலீசாரை மிரட்டும் தொனியில் பேசிய நபர் கைது
Jul 24 2021 12:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை நொளம்பூரில், குடிபோதையில் காவல்துறையினரிடம் தகராறில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
நொளம்பூரை அடுத்த ரெட்டிப்பாளையம் பகுதியில் சாலையில் ஜல்லி, மணல் கொட்டியதாக தகராறு ஏற்பட்டதை அடுத்து, அங்கு விசாரணைக்காகச் சென்ற நொளம்பூர் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜிடன், நேற்று மர்ம நபர் ஒருவர் மதுபோதையில் மிரட்டும் தொனியில் பேசினார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. பின்னர் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், காவல்துறையினரை மிரட்டும் பானியில் பேசிய நபர், சென்னீஸ்குமார் என்பது தெரியவந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.