மதுரையில் மூதாட்டியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகையை பறிக்க முயன்ற நபர் - வீட்டின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்
Jul 23 2021 7:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மாவட்டம் மேலூரில், கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறிக்க முயன்ற கொள்ளையனிடம், கத்தியைப் பிடித்து 60 வயது மூதாட்டி ஒருவர் துணிச்சலுடன் எதிர்த்துப் போராடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
மேலூர் பிஸ்மில்லா நகரைச் சேர்ந்த ஷாஜகான் என்பவர், மேலூர் - சிவகங்கை சாலையில் வெல்டிங் கடை நடத்தி வருகின்றார். இவர் வெளியில் சென்றிருந்த நிலையில், அவரது மனைவி ஆமீனாபீவி மற்றும் மகள் பயாஸ்பானு ஆகிய இருவர் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அமீனாபீவியிடம் கத்தியக் காட்டி மிரட்டி, நகையை பறிக்க முயன்றுள்ளார். ஆனால் அஞ்சாத மூதாட்டி, துணிச்சலுடன் கத்தியைப் பிடித்து அவரை எதிர்த்து போராடியுள்ளார். இதனை அடுத்து சத்தம் கேட்டு, அவரது மகள் அங்கு வரவே, அந்த நபரும், அவருடன் வந்த மற்றோரு நபரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். கத்தியைப் பிடித்ததில் மூதாட்டி அமீனாபீவுக்கு வலது கைப் பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.