மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் கனமழை எதிரொலி - குற்றாலம் அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு
Jul 23 2021 2:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை பெய்து வருவதால், குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்திலும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றாலம் மெயின் அருவியில், பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதேபோல் ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.