1,270 பாடல்களின் முதல் வரியைக் கொண்டு எஸ்.பி.பி.யின் ஓவியம் - சேலம் இளைஞர் அசத்தல்
Jun 4 2021 12:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, ஆயிரத்து 270 பாடல்களில் முதல் வரியைக் கொண்டு, அவரது உருவத்தை வரைந்து சேலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.
சேலத்தில் தனியார் நட்சத்திர விடுதியில் சமையல் நிபுணராக பணியாற்றி வரும் அல்லிக்குட்டை பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்பவர் இந்த ஓவியத்தை தீட்டியுள்ளார். ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்ட இவர், எஸ்.பி.பி.யின் மீது கொண்ட பற்றின் காரணமாக அவர் பாடிய ஆயிரம் நிலவே வா பாடல் முதல் அண்ணாத்த படம் வரை, சிறந்த ஆயிரத்து 270 பாடல்களின் முதல் வரியைக் கொண்டு இந்த ஓவியத்தை வரைந்துள்ளார். முன்னதாக இவர் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அக்னி சிறகுகள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள வாசகத்தை கொண்டு, அவரது உருவத்தை வரைந்து உலக சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.