ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாகன தணிக்கையில் காவல்துறையினர்
May 15 2021 12:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அத்தியாவசியமின்றி வாகனங்களில் சுற்றி திரிபவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர். வத்திராயிருப்பு எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், உரிய காரணம் இருந்தால் மட்டுமே ஊருக்குள் அனுமதிக்கின்றனர். தேவையின்றி வருபவர்களை ஊருக்கு விடாமல், அபராதம் விதித்தும், எச்சரித்தும் போலீசர் திருப்பி அனுப்பி விடுகின்றனர்.